புதன், 14 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 14 - 15

கலித்தொகை – அரிய செய்தி – 14 - 15
ஐயப்படாத அகவாழ்க்கை
 …………………….. குறவர் மடமகளிர்
தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
கபிலர். கலித். 39  :  10 - 12
 குறிஞ்சி நில குறவர் மடமகளிர் என்றும் பிழை செய்யார்; தாம் தம் கணவரைப் போற்றி த் தெய்வமென்று தொழுது எழுவர்; இதனால் அவர்தம் கணவன்மாரும் குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையர் ஆயினர். ( ஈண்டு - இல்லறவியல் கோட்பாடு ஆராயத் தக்கது)
கலித்தொகை – அரிய செய்தி – 15
சந்தனமர உரல்
தகை கொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ
முகைவளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்
 வகைசால் உலக்கை வயின் வயின் ஓச்சி
கபிலர். கலித். 40  :  3- 5

 முற்றித் தலை சாய்ந்த தினைக் கதிரை உருவி – வளர்ந்த சந்தன மரத்தால் ஆன உரலில் இட்டு – முத்து நிறைந்த யானைத் தந்தத்தால் ஆன உலக்கையைக் கொண்டு மாறி மாறி உயர்த்திக் குற்றுவாம். ( யானைத் தந்தத்தில் முத்து விளையும் என்று பல பாடல்களில் வந்துள்ளன – இஃது உண்மையோ ? ஆய்க)   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக