செவ்வாய், 13 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 12 - 13

கலித்தொகை – அரிய செய்தி – 12 - 13
நீள் மாடக் கூடல்
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதன்றோ
 பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 35  :  17 - 18
நிலத்தில் உள்ளோர் நாவிலே வழங்கும் சிறப்புடைய நீண்ட மாடங்களை உடைய மதுரை நகரில் வாழும் அறிவினை உடைய சான்றோர் நாவில் பிறந்த கவிதைகளின் புதுமையை நுகரும் காலம்  - இவ்விளவேனிற் காலமன்றோ …!. ( ..புலன் நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் - புரிசை சூழ் புனல் ஊர் : கலித். 68.–என்று மதுரை குறிக்கப்படுகிறது)
குறிஞ்சிக் கலி -  கபிலர்
கலித்தொகை – அரிய செய்தி – 13
இலங்கை வேந்தன்
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
 உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
 ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின்  கீழ்புகுத்து அம்மனை
 எடுக்கல் செல்லாது உழப்பவன்  …..
கபிலர். கலித். 38  :  1 - 5
  இமயமலையை வில்லாக வளைத்தவன் ‘; கங்கையின் ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடைய இறைவன் சிவபெருமான் – இறைவியாகிய உமையம்மையுடன் உயர்ந்த இமயமலையிலே இருந்தான்; அதுபோது பத்துத் தலைகளை உடையவனும் அரக்கர்களின் தலைவனுமாகிய இராவணன்  இமயமலையை எடுத்தற்காகத் தொடியழகு பெற்ற தடக்கைகளினால் அம்மலையை எடுக்கலாற்றாது வருந்தினன்.
( இமயவில் வாங்கி என்பதற்கு நச்சினார்க்கினியர் –” இமய மலையிடத்துப் பிறந்த மூங்கிலை வில்லாக வளைத்து” என்று பொருள் கூறுகின்றார். ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக