வியாழன், 29 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 44

கலித்தொகை – அரிய செய்தி – 44
தேய்ந்து அழியும் செல்வம்
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்.
 நல்லந்துவனார். கலித் . 149 : 4 –7

தன்னிடமிருந்து ஒன்றும் பெறாமல் தனக்குக் கற்பித்த ஆசான் மனம் வருந்திய காலை  - தன்கைப் பொருளைக்பகிர்ந்துண்டு உண்ணாதவன் செல்வம்; தான் கற்ற வித்தையைத் தவறாகப் பயன்படுத்துபவனுடைய செல்வம் ; தனக்கு ஒரு வருத்தம் உற்ற இடத்து உதவினவர்கட்கு – வருத்தம் ஏற்பட்ட காலை உதவாதவனுடைய செல்வம் ; ஆகிய இவையெல்லாம் தாமகவே தேய்ந்து அழியும். அதுமட்டுமன்றி அவனுடைய செய்ந்நன்றிக் கேடு உடம்பினை ஒழித்து உயிர் போன இடத்தும் அது நுகராமற் செல்லாது காண்.
கலித்தொகை – அரிய செய்தி
முற்றிற்று
பதிற்றுப்பத்து – அரிய செய்தி … தொடரும்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக