ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 36 - 37

நெய்தற்கலி – நல்லந்துவனார்
 கலித்தொகை – அரிய செய்தி – 36 - 37
பசலை – தோல் நோய்
காரிகை பெற்ற தன்கவின் வாடக் கலுழ்பு ஆங்கே
 பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் …..
நல்லந்துவனார். கலித் . 124 : 7 -8
 தலைவி தான் பெற்ற பேரழகு கெடும்படி மனம் கலங்குவதால் பீர்க்கம் பூவை அடுக்கி வைத்தாற் போன்று பிறை போன்ற நெற்றியில் பசலை படர்ந்து பரவி உள்ளதே….
( மருத்துவ அறிவியல் படி  மனம் கலங்குதல் – கவலை – இதனால் தோலில் தோன்றி மறையும் தேமல் தோன்றும் .  கவலையே நோய்களுக்குக் காரணம் – உளவியல் -. மேலும் ஆய்க.)
கலித்தொகை – அரிய செய்தி – 37
மனசாட்சி
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
 தங்காத தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்
     நல்லந்துவனார். கலித் . 125 : 1 - 4

 உலகத்துள் தாம் செய்யும் காரியங்களுள் தாமே உணர்ந்து செய்யக் கூடாதது இது என்று விலக்க வேண்டும் – தடுப்பவர் இன்றியே தீயது இது என  ஒதுக்க வேண்டும் ; அப்படி இன்றி – கண்டவர் யாரும் இல்லையே என்று தாம் நெஞ்சு அறியவே செய்த கொடிய தீய வினைகளைப் பிறர் அறியாமல் மறைத்தலும் செய்வர்;  ஆயினும் அவர்தம் நெஞ்சத்துக்கு எதையும் மறைக்க முடியாது – நெஞ்சத்தைக் காட்டிலும்  கண்கண்ட சாட்சி வேறில்லை  -- அதை நான் சொல்லவும் வேண்டுமோ ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக