ஞாயிறு, 18 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 22 - 23

கலித்தொகை – அரிய செய்தி – 22 - 23
நெடுநாள் பிரிவு -  கூடுதல்
 ………………. நீ வருநாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ
 மாரிக்கு அவாவுற்றுப் பீள்வாடும் நெல்லிற்கு ஆங்கு
 ஆராத் துவலை அளித்தது போலும் நீ
ஓர் பாட்டு ஒரு கால் வரவு.
 மருதன் இளநாகனார். கலித். 71 : 23 – 26
தலைவ ! ஓர் ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற நின் வரவு பெருமழைக்கு விரும்பி வாடிய நெற்பயிருக்குச் சிறு தூறல்கள் என்ன பயனைத் தரும். வெப்பத்தைக் கிளப்பி விட்டு அதிக துயரத்தைத் தானே தரும் ; நின் வரவும் அதிக வருத்தத்தைத் தருவதாகும் ஆதலான் நீ முழுதும் மனந்திருந்தி வரும்வரையும் யாம் ஆற்றியிருப்பபேம் – என்றாள் காமக்கிழத்தி.
கலித்தொகை – அரிய செய்தி – 23
மெல்லணை
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
 துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ
மருதன் இளநாகனார். கலித். 72 : 1 – 2

 இரட்டையாகச் சேர்ந்து – உயர்ந்த நீலப் பட்டாலாய மெல்லிய படுக்கை – அதனிடத்து ; துணையோடு கூடின அன்னத்தின் தூவியாற் செய்த மெல்லிய தலயணை. (  சேவலும் பெடையுமாகிய அன்னங்கள் புணரும் பொழுது  அவ்வின்ப உணர்ச்சி காரணமாக அவற்றின் உடலினின்று தாமே உதிர்கின்ற மெல்லிய தூவிகளே பஞ்சாகக் கொண்டு மெத்தைகளை உருவாக்கினர். ) காம உணர்ச்சி அதிகம் உடையவர்களுக்குத் தலை முடி கொட்டி வழுக்கை விழுமாமே – ஆய்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக