திங்கள், 19 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 24 - 25

கலித்தொகை – அரிய செய்தி – 24 - 25
தமிழீழம்
பண்புடை நல்நாட்டுப் பகை தலை வந்தென
அது கை விட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழற்
 பதி படர்ந்து இறை கொள்ளும் குடி …………..
 மருதன் இளநாகனார். கலித். 78 : 4 – 6

 நற்பண்புகள் வாய்ந்த நல்ல நாட்டிலே பகை வந்து சேர்ந்ததாக – அந்நாட்டைக் கைவிட்டுச் சென்ற மக்கள் – தம்மைக் காக்கும் தகுதி உடையவனின் குடை நிழலில் மற்றோர் பதியில் தங்கி வாழ்வர்.
கலித்தொகை – அரிய செய்தி – 25
சிவபெருமான் மகன் முருகன்
 ஆல் அமர் செல்வன் அணிசால் பெரு விறல்
 போல வரும் என் உயிர்
ஆலமர் செல்வனின் அழகிற் சிறந்த  முருகனைப் போல வரும் மகனாகிய என் உயிர்.
மருதன் இளநாகனார். கலித். 81 :  9 - 10
ஆல் அமர் செல்வன் அணிசால் மகன் விழாக்
 கால்கோள் என்று ஊக்கி ……………………….
மருதன் இளநாகனார். கலித். 83 : 14 - 15



மிக்க புகழை உடைய ஆலமர் செல்வனின் மகனாகிய குமரப் பெருமானின் விழா தொடங்கிற்று போலும் என்று எண்ணினர். ( ஆலமர் செல்வன் மகன் – என்பதற்கு இறைவனுடைய மகனாகிய பிள்ளையார் என்றார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்று குறிக்கின்றார் பெருமழைப் புலவர். ஆனால் பிள்ளையார் என்று நச்சினார்க்கினியர் சுட்டியிருப்பது முருகவேளை என்று சான்று காட்டுவார் இ.வை. அனந்தராமையர். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக