சனி, 17 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 20 -21

கலித்தொகை – அரிய செய்தி – 20 -21
பிறர்க்கு இன்னா
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
 செய்வது நன்று ஆகுமோ
 கபிலர். கலித். 60 :  7- 8
 தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிதிற் செய்து இன்பத்தைத் தருமோ ?.
மருதக் கலி - மருதன் இளநாகனார்
கலித்தொகை – அரிய செய்தி – 21
தீ வலம் வருதல்
 காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மட நோக்கின் மடந்தைதன் துணையாக
ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் ……
மருதன் இளநாகனார். கலித். 69 : 3 - 5
 காதல் கொள்கின்ற திருமண நாளிலே  - மேலாடைக்குள் ஒடுங்கி  நோக்குகின்ற – மருண்ட மான் போலும் நோக்கினை உடைய மடந்தை – தனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக உடன் வந்து நிற்க -  வேதம் ஓதும் அந்தணன் எரி வலம் வருதலைச் செய்வான்.  ( சங்க இலக்கியங்களில் திருமணம் பற்றிய செய்திகள் அரிதாகவே காணப்படுகின்றன . காண்க . அகம். 86. 136. அகநானூற்றுப் பாடல்களிலும் தீவலம் வருதல் சுட்டப் பெறவில்லை.  கலித் தொகையில் இந்த ஒரு பாடலில் மட்டுமே தீ வலம் வருதல்  சுட்டப்படுகின்றது .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக