ஞாயிறு, 6 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 374

திருக்குறள் – சிறப்புரை : 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. – 374
இரவும்பகலும் இணைந்து ஒரு நாளாதல் போல இவ்வுலகம் இருவேறு இயல்புடையதாக இருக்கிறது ; செல்வம் உடையவர்,  தெளிந்த அறிவுடையர்  ஆகிய இருவேறு இயல்புடையோர் இவ்வுலகில் உள்ளனர்.
“ உம்மை வினை வந்து உருத்த காலைச்
 செம்மை இலோர்க்குச் செய் தவம் உதவாது” – சிலப்பதிகாரம்.

முன் செய்த வினை, அதன் பயனை விளைவிக்க வந்து சேர்ந்த பொழுது, பண்பு இல்லாதவர்க்கு அவர் செய்த தவமும் உதவாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக