ஞாயிறு, 13 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 381

                                              பொருட்பால்
39. இறைமாட்சி
திருக்குறள் – சிறப்புரை : 381
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. – 381
படைவலிமை, நன்மக்கள், நிறைந்தவளம், அறிவிற்சிறந்த அமைச்சர்கள், நட்பிற்சிறந்த நல்லுறவு, வலிமையான எல்லைப் பாதுகாப்பு ஆகிய இவ்வாறும் நிறைவாகப் பெற்றவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.
:” உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே” -பதிற்றுப்பத்து

1 கருத்து: