ஞாயிறு, 20 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 386

திருக்குறள் – சிறப்புரை : 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். – 386
மன்னன், தங்குதடையின்றிக் குடிமக்கள் காண்பதற்கு எளிமை உடையவனாகவும் எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருப்பானேயானால்  அவன் ஆளும் நிலவுலகத்தார் யாவரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்.
“ முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
 உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே.” – புறநானூறு.

நீதி வேண்டிய காலத்துக் காட்சிக்கு எளியராய் வந்து நீதி வழங்கும் மன்னர், மழைத்துளியை விரும்பியவர்க்குப் பெருமழை கிடைத்தது போன்றவர்.

1 கருத்து: