புதன், 9 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 377

திருக்குறள் – சிறப்புரை : 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. – 377
   இன்னார்க்கு இவ்வளவு என்று ஊழே வரையறுத்துள்ள நிலையில்,  கோடி கோடியாகச் செல்வத்தைக் குவித்தவர்களும்கூட  ஊழ்வினை வகுத்த விதிகளுக்கு மேலாக இன்பத்தை துய்த்துவிட முடியாது .
“ முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்.” – பழமொழி நானூறு.

உலகத்தை  முழுமையாக முன்னே படைத்தவன், நாம் அடைகின்ற துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது முயற்சியின்றி இருந்தால்  துன்பம் நீங்குமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக