திங்கள், 7 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 375

திருக்குறள் – சிறப்புரை : 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. – 375
செல்வத்தை ஈட்டும் முயற்சியில்  ஆகூழால்  தீயவைகூட நல்லவையாகி நன்மை பயத்தல்   உண்டு ; போகூழால் நல்லவை எல்லாம்கூடத் தீயவையாகிக் கேடு பயத்தல் உண்டு.
“ ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா” – சிலப்பதிகாரம்.
ஒழிக என வேண்டினும் ஒழியாது தானே எதிர்வந்து தன் பயனை ஊட்டக்கூடியது வல்வினை ; நிலத்தில் இட்ட வித்தினைப் போல ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி உரியவரை வந்துசேரும் அதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஊழ் – வினை விளையும் காலம் என்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக