வியாழன், 10 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 378

திருக்குறள் – சிறப்புரை : 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். – 378
தீவினையின் பயனாகிய துன்பத்தைத் துய்க்கவிடாது ஊழ்வினை கழியுமேயானால்  வறுமையினால் துய்த்தல் இல்லாதவர்கள் துறவு மேற்கொள்வார்கள்.
” ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்” – சிலப்பதிகாரம்.

முன் செய்த தீவினை உருப்பெற்றுவந்து தன் பயனைத் துய்க்கச்செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக