திங்கள், 14 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 382

திருக்குறள் – சிறப்புரை : 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. – 382
ஒரு நல்ல அரசனுக்குரிய இலக்கணமாவது, பகைக்கு அஞ்சாமை, இரவலர்க்கு ஈதல், தெளிந்து ஆராயும் அறிவு, மக்களுக்கு உழைப்பதில் ஊக்கம் ஆகிய இந்நான்கு இயல்புகளும் என்றும் குறைவுபடாமல் இருப்பதேயாம்.
“ குழவியைப் பார்த்து உறூஉம் தாய்போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர …. – கலித்தொகை.

அரசனே… !  குழந்தையைப் பார்த்து பார்த்து முலை சுரந்து பால் ஊட்டும் தாயைப்போல, மழையானது தன்னை வேண்டின காலத்தே முறையாகப் பெய்து, உலகைப் பாதுகாத்து வருகிறது ; இந்த நல்ல வளம் எல்லார்க்கும் தப்பாது வருதற்கு நின் செம்மையான ஆட்சி முறையே காரணமாக விளங்குகிறது.

1 கருத்து: