புதன், 16 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 384

திருக்குறள் – சிறப்புரை : 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. – 384
அறத்திற்கு இழுக்கு நேராவண்ணம் ஒழுகுதலும் ; அல்லவை நீக்கி அருளுதலும் ;  வீரத்தில் அறவழியில் மானம் காத்தலும் ஆகிய அறங்களைப் பேணுவதே ஒரு நல்ல அரசுக்குரிய இலக்கணமாம் .
“ ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்
வானத்தன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி…… ” - புறநானூறு.

சூரியனைப் போன்ற வெம்மையான ஆற்றலுடைய வீரமும் திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மையும் வான் மழை போன்ற கொடைச் சிறப்பும்  உடையவனாகுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக