செவ்வாய், 15 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 383

திருக்குறள் – சிறப்புரை : 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு. – 383
காலத்தைக் கண்ணெனப்போற்றல், தேர்ந்த கல்வியறிவு,  மயங்காது துணிந்து முடிவெடுத்தல் ஆகிய இம்மூன்று குணங்களும்  நிலமாளும் அரசனுக்கு என்றும் நீங்காதிருத்தல் வேண்டும். அஃதாவது காலம்தாழ்த்தாது ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவனாக மன்னன் செயல்பட வேண்டும் என்பதாம்.
“ கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
 கொல்சின வேந்தன் அவை காட்டும்..” – பழமொழி நானூறு.

பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக