திங்கள், 28 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 394

திருக்குறள் – சிறப்புரை : 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். – 394
சான்றோர் அவையில் பலரும் மகிழும்படி அறிவார்ந்த கலந்துரையாடல் நிகழ்த்தி, மீண்டும் எப்போது கூடி மகிழ்வோம்  என எல்லோரும் ஏங்குமாறு பிரிந்து , பிறிதோர் சான்றோர்அவை நாடிச் செல்வதே புலவர் தொழிலாம்.
“ போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
  தேற்றும் புலவரும் வேறு.” – நாலடியார்.

 நூல்களைப் பாதுகாத்துவைக்கும் புலவர் வேறு ; அவற்றைப் படித்துப் பொருள் உணர்ந்து உள்ளத்தைத் தெளிய வைக்கும் புலவர் வேறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக