செவ்வாய், 22 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 388

திருக்குறள் – சிறப்புரை : 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். – 388
நெறிமுறை தவறாது ஆட்சி செய்து மக்களைப் பாதுகாத்துவரும் மன்னன் மக்களுக்கெல்லாம் இறைவன் என்று போற்றப்படும் சிறப்பை அடைவான்.
“ நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
 மன்னன் உயிர்த்தே  மலர்தலை உலகம்.” – புறநானூறு.

இவ்வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று அரசனே உயிராவான் ; மக்கள் உடலாவர்.( உடலுக்கு வரும் துன்பத்தை, உயிர் தாங்குமன்றோ…!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக