புதன், 23 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 389

திருக்குறள் – சிறப்புரை : 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. – 389
மக்கள் கூறும் குற்றம் குறைகள்,  தன்  காது கசக்கும்படியாக இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருமையுடன்  கேட்டுத் தன்னைத் திருத்திக் கொள்ள முயலும் பண்புடைய மன்னன் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புவர்..
“ மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்க அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக் கண் அகன் ஞாலம்” – புறநானூறு.

மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம் அரசனைப் பழித்துரைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக