சனி, 26 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 392

திருக்குறள் – சிறப்புரை : 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. – 392
 ஆறறிவு உடைய மக்களுக்கு நல்வழிகாட்டும் இரு கண்களைப் போன்றவை எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டுமே.
“ எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
 மம்மர் அறுக்கும் மருந்து.” – நாலடியார்.
 அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து,  கல்வியைப்போல் வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறியவில்லை.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக