செவ்வாய், 29 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 395

திருக்குறள் – சிறப்புரை : 395
உடையார்முன் இல்லார்போல் எக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். – 395
உள்ளவர்முன் இல்லாதார் நின்று,  ஏங்கி இரந்து  பொருள் வேண்டுதல் போலக் கற்றார்முன் பணிந்து கல்வி கற்றவரே கற்றவர் ஆவர், அவ்வாறு கற்க முயலாதார் இழிந்தோராவர்.
“ … ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு.” – நான்மணிக்கடிகை.

 ஒரு குடும்பத்தில் கல்வி கற்காதவன் மூத்தவனாயினும் எவரும் மதிக்கமாட்டார் ; கற்றவன் இளையவனாயினும் அவனை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக