வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018


திருக்குறள் -சிறப்புரை :960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்மாட்டும் பணிவு.---  ௯௬0
நல்வாழ்வு வாழ வேண்டுமெனில்பழிக்கு அஞ்சும் பண்பாகிய நாணுடைமை வேண்டும் ; பிறந்தகுடியின் பெருமையைக் காக்க வேண்டுமெனில் யாவரிடத்தும் பணிவன்பு உடையவனாக நடந்துகொள்ள வேண்டும்.

“ பிறர் தம்மை பேணுங்கால் நாணலும் பேணார்
 திறன் வேறு கூறின் பொறையும் – அற வினையைக்
காராண்மை போல ஒழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.” –திரிகடுகம்.

பிறர் புகழ்ந்து பேசும்பொழுது தனக்கு இது தகாது என்று நாணுதலும் ; பிறர் தன்னை இகழும்பொழுது பொறுத்தலும் ; மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் பிறர்க்கு உதவி செய்தலும் ஆண்மைக்குரிய செல்வங்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக