சனி, 18 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :968


திருக்குறள் -சிறப்புரை :968
மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து .—௯௬௮
(மருந்தோ மற்று ; ஊன் ஓம்பும்; பீடு அழிய )
மனிதன் பெருந்தகுதி உடையவனாக  விளங்கக் காரணமாயிருப்பது மானம் ஒன்றே. மானம் அழிய நேரிட்டபோது உயிரை விட்டொழிக்காமல் தன்னுடைய ஊனுடலை அழியாமல் காக்க விரும்பும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தாகுமோ..?
“தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று தம்
இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக – பின்னர்ச்
சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு ஆங்கு
இறுவரை இல்லை எனின். –நீதிநெறி விளக்கம்.
 தமக்கு இனிமேல் இறத்தல் இல்லையென்று உறுதியாக உணர்ந்தார், தம் வலிமையையும் மானத்தையும் இழந்தேனும் தம் உயிரைப் பாதுகாக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக