வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :966


திருக்குறள் -சிறப்புரை :966
புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. ---- ௯௬௬      
(புகழ் இன்றால்)
தன்மானம் இழந்து தன்னை இகழ்வார்பின் சென்று நிற்றல் ஒருவனுக்கு இம்மையில் (வாழும் காலத்து)புகழினைக் கொடுக்காது, மறுமையில் (இறந்தபின் ) உயர்ந்தோர் உறையும் உலகத்தும் கொண்டுசேர்க்காது,  அவன் அப்படி உயிர்வாழ்தலின் பயன்தான்  யாதோ ?
“ இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை.” –புறநானூறு.
இந்த அகன்ற உலகத்தில் புகழுடையார்க்கு அல்லாது பிறர்க்கு உயர் நிலை உலகை அடைதல் இயலாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக