செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :971


98. பெருமை
திருக்குறள் -சிறப்புரை :971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். --- ௯௭௧
(அஃது இறந்து)
ஒருவனுக்குப் புகழாவது செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கும் ஆற்றலே ஆகும் . ஒருவனுக்கு இழிவாவது செயலாற்றல் இன்றி வாழலாம் என்று  எண்ணும் எண்ணமாகும்.
“ கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும்….” ---நாலடியார்.
“ கற்ற கல்விபற்றியும் சிறந்த ஒழுக்கம்பற்றியும் குடிப்பிறப்பின் பெருமைபற்றியும் மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதே பெருமை உடையதாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக