சனி, 11 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :961


97. மானம்

        திருக்குறள் -சிறப்புரை :961
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். --- ௯௬௧
தவிர்க்க இயலாத செயல்களானாலும் தன்மானம் தாழ்வுறும் நிலையாயின் எந்த ஒரு செயலையும் செய்யாது விட்டுவிட வேண்டும்.
“ பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார் ..” –நாலடியார்.
மானமுள்ளவர்கள் செத்துப் போவதாயிருந்தாலும் மானம்கெட வரும் பழி, பாவச் செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக