ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :976


திருக்குறள் -சிறப்புரை :976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. --- ௯௭
(பேணிக் கொள்வோம் என்னும்)
சான்றோராகிய பெரியோர்களைத் தமக்குத் துணையாக்கிக் கொள்வோம் என்னும் எண்ணம் சிறுமைக் குணங்கள்  கொண்டவர்களிடத்தே தோன்றுவதில்லை.
” பெரியார் பெருமை பெரிதே..” –திணைமாலை நூற்றைம்பது.
சான்றோர்தம் பெருமைக்குணம் உண்மையில் கொண்டாடத் தக்கதே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக