திங்கள், 20 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :970


திருக்குறள் -சிறப்புரை :970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.---- ௯௭0
தன்மானத்திற்கு ஒருசிறிது இழுக்கு நேரினும் உயிரை நீத்துவிடும் இயல்புடையாரின் பெருமையைப் போற்றிப் புகழ்வர் இவ்வுலகோர்.
” கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.” –புறநானூறு.
நல்வினை ஆற்றி, இமயமலையின் ஓங்கிய சிகரம் போன்று தம் புகழை நிலைநிறுத்திப் பழியற்ற உடலோடு சாதல் நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக