தமிழமுது
–159 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 19.
தமிழிசை.
முனைவர்
ராம. கெளசல்யா.
எனினும் 19ஆம் நூற்றாண்டையே தமிழிசையின் பொற்காலம் என்று
கூறவேண்டும். ஏராளமான இயலிசைப் புலவர்கள் இக்காலகட்டத்தில் அருமையான பதங்களையும்
கிருதிகளையும் இயற்றி, தமிழிசையை வளப்படுத்தினார்கள். இதற்கு அக்காலச்சூழல் துணைநின்றது,
மராட்டிய கதை சொல்லும் வடிவமான கீர்த்தன் என்பதனை ஒட்டி தஞ்சாவூரில் தமிழில் உருவானதே
‘ஹரிகதை’ என்னும் வடிவமாகும்.
தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதரால் உருவாக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த
இந்த ஹரிகதை வடிவத்தில் புராண இதிகாசக் கதைகளைச் சொல்ல நிறையப் பாடல்கள் தேவைப்பட்டன.
இதன் விளைவே அப்போது தோன்றிய நாடகக்கீர்த்தனைகளும் சரித்திர கீர்த்தனைகளும் ஆகும்.
ஏராளமான இதிகாச, புராணக் கதைகள் கீர்த்தனை வடிவில் இயற்றப்பட்டன.
கிருதி என்னும் இசை வடிவம் முழுமை பெற்று இயற்றுவதற்கு எளிமையாக அனைவருக்கும் கைவந்தது. ஐரோப்பியரால்
அறிமுகப்படுத்தப்பட்ட அச்சுக்கலையைப் பயன்படுத்தும் உரிமை அனைத்துத்தரப்பினருக்கும்
கிடைத்தது. இந்த வசதி இப்பாடல்கள் பரவ மிகப் பெரிய அளவில் உதவியது. அக்காலத்து பிரபல
இயலிசைப் புலவர்களின் பட்டியலே பிரமிப்பைத் தருகிறது..
ஆனையா, கனம் கிருஷ்ணய்யர், தஞ்சை நால்வர், மழவை சிதம்பர பாரதி, கோபாலகிருஷ்ணபாரதியார்,
லாவணி வெங்கடராவ், வள்ளலார், தரங்கம்பாடி பஞ்சநாத அய்யர் சகோதரர்கள், சின்னு சுவாகிதாசர்,
ராமசாமி சிவன் மகா வைத்தியநாத அய்யர் சகோதரர்கள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்,
முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி, நீலகணடசிவன், கிருஷ்ண பாகவதர், அண்ணாமலை ரெட்டியார்,
அனந்த பாரதி,…….
………………………. தொடர்கிறது…………………………….