வியாழன், 2 அக்டோபர், 2025

தமிழமுது –139. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள். .............தென் எல்லையை இழந்த தென்னவன்:

 

தமிழமுது –139. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

 

சோழன் நல்லுருத்திரன் – கலித்தொகை : 104.

 

தென் எல்லையை இழந்த தென்னவன்:

“மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வெளவலின்

பொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட

புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கெண்டை

வலியினான் வணக்கிய வாராச் சீர்த் தென்னவன்

தொல் இசை நட்ட………………………”--- 1 -5..

 

ஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் மண்ணைக் கைக்கொண்டதால் அப்பகுதி மூழ்கிற்று , மனம் தளரா பாண்டிய மன்னன் தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டுப் பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி அவர் மேல் படை எடுத்தான்; சோழர், சேரர்தம் படைகளை வென்று, அவர்தம் புலி, வில் கொடிகளை நீக்கித் தன் மீன் கொடியைக் கைபற்றிய பகுதிகளில் நாட்டி, ஆற்றலால் மேம்பட்டு நின்றனன், கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன்.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக