தமிழமுது
–139. – பண்டைய தமிழ்நாட்டின்
எல்லைகள்.
சோழன் நல்லுருத்திரன் – கலித்தொகை : 104.
தென் எல்லையை இழந்த
தென்னவன்:
“மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வெளவலின்
பொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாராச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட………………………”--- 1 -5..
ஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் மண்ணைக்
கைக்கொண்டதால் அப்பகுதி மூழ்கிற்று , மனம் தளரா பாண்டிய மன்னன் தன் நாட்டை விரிவாக்கும்
பொருட்டுப் பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி அவர் மேல் படை எடுத்தான்; சோழர்,
சேரர்தம் படைகளை வென்று, அவர்தம் புலி, வில் கொடிகளை நீக்கித் தன் மீன் கொடியைக் கைபற்றிய
பகுதிகளில் நாட்டி, ஆற்றலால் மேம்பட்டு நின்றனன், கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும்
…………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக