ஞாயிறு, 1 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 421

திருக்குறள் – சிறப்புரை : 421
43.அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
 உள்ளழிக்க லாகா அரண். ~ 421
அறிவு என்பது அழிவு வாராமல் காக்கும் கருவியாகும் மேலும் பகைவராலும் உள்ளே நுழைந்து அழிக்கமுடியாத  மனவலிமை என்னும் பாதுகாப்பையும் தருவதாகும்.
“ அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்” ~ கலித்தொகை .133.

அறிவு எனப்படுவது  அறியாதார் கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக