வியாழன், 26 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 441

திருக்குறள் – சிறப்புரை : 441
பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
 திறனறிந்து தேர்ந்து கொளல். --- ௪௪௧
 அறவழியைப் போற்றி அதன்வழி நிற்க, அறிவிலும் பட்டறிவிலும் தேர்ந்த பெரியோர்களுடைய நட்பினை ஆராய்ந்து அறிந்து தேடிப் பெறவேண்டும்.
“ பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
 வரிசை வரிசையா நந்தும் …” ---- நாலடியார்.
பெரியோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறை போல ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர்ந்து சிறக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக