வெள்ளி, 27 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 442

திருக்குறள் – சிறப்புரை : 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
 பெற்றியார்ப் பேணிக் கொளல். – ௪௪௨
தனக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கி மீண்டும் அத்தகைய துன்பம் வரும் முன்னரே காக்கும் நற்குணம் உடையவர்களைப் போற்றி நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.
“ சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
  வலியாகிப் பின்னும் பயக்கும்… “ ஐந்திணை எழுபது.

நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு, அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக