சனி, 28 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 443

திருக்குறள் – சிறப்புரை : 443
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
 பேணித் தமராகக் கொளல். --- ௪௪௩
அரிய செயல்களுள் அரிய பெரிய செயலாவது மூத்த அறிவுடையோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதலேயாம்.
“ சேய்த்தானும் சென்று கொளளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு.” – நாலடியார்..

வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் வலியச் சென்று அவர்தம் நட்பைக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக