ஞாயிறு, 29 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 444

திருக்குறள் – சிறப்புரை : 444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை. ---- ௪௪௪
தம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரியாரைச் சுற்றமாகக் கொண்டு ஒழுகுதல் ஓர் அரசன் தான் பெற்றுள்ள படை வலிமைகள் எல்லாவற்றையும் விடத் தலை சிறந்த வலிமையாகும்.
” குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்
 குன்று அன்னார் கேண்மை கொளின்.” ------ நாலடியார்

பெருமை இல்லாதவர்கள், புகழில் மலைபோல் உயர்ந்து நிற்கும் சான்றோர்களின் நட்பைக் கொள்வார்களானால் அவர்களும் பெருமை பெற்று விளங்குவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக