திங்கள், 2 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 422

திருக்குறள் – சிறப்புரை : 422
சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. ~422
மனம் போன போக்கில் போகாது தீயவற்றினின்று விலக்கி நல்வழியில் செலுத்துவது அறிவாகும்.
“மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
 சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய்.” ~ நாலடியார்.

மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை. மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து.. துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக