செவ்வாய், 10 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 430

திருக்குறள் – சிறப்புரை : 430
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். ~௩௰
அறிவுடையார் எவ்வகையான செல்வம் இல்லாதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவர் ; அறிவிலார் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
தேடிப் பெறவேண்டிய அரிய செல்வம் அறிவே என்றறிக.
”ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
 ஓதி அனையர் உணர்வுடையார் ……. நாலடியார்.

பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக