திங்கள், 16 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 435

திருக்குறள் – சிறப்புரை : 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
 வைத்தூறு போலக் கெடும்.  ~
குற்றம் புரிவதால் வரும் தீயவிளைவுகளை எண்ணி, அதனை விலக்கித்  தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, வைக்கோல் பொதியின் முன் கவனமின்றி வைக்கப்பெற்ற தீயால், வைக்கோல் பற்றி எரிந்து சாம்பல் ஆவதைப் போலக் கெடும்.  
“ இசையும் எனினும் இசையாது எனினும்
 வசைதீர எண்ணுவர் சான்றோர் … - நாலடியார்
 சான்றோர், தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக