திங்கள், 2 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :835


திருக்குறள் -சிறப்புரை :835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.--- ௮௩௫
(தான் புக்கு அழுந்தும்)
பேதையானவன் வாழும் நெறி அறியாதவன் ஆகையினாலே எடுத்த இப்பிறவியிலேயே வரும் பிறவிகளில் துய்க்கவேண்டிய நரகவேதனைகளை எல்லாம் துய்த்துமுடிக்க வல்லவனாவான்.
”உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டு – ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு
நின்று வீழும் தக்கது உடைத்து.” –நாலடியார்.
அழகும் இளமையும் சிறந்த செல்வமும் பலரும் கண்டு அஞ்சத்தக்க மதிப்பும் ஒரே தன்மை உடையதாய் நிலைத்து நில்லாமை கண்டும் இப்பிறப்பில் யாதொரு நற்செய்கையும் இல்லாதவனுடைய வாழ்க்கை வெறும் உடலைப் பெற்று நின்று வீழும் தன்மை உடையது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக