செவ்வாய், 10 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :843


திருக்குறள் -சிறப்புரை :843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.--- ௮௪௩
அறிவிலார் தமக்குத்  தாமே உண்டாக்கிக்கொள்ளும் துன்பத்தைத் துன்பம் தருவதற்குரிய செயல்களைச் செய்யும் பகைவர்களாலும் செய்தற்கு அரிதாம்.
“நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்காலென்.”—நாலடியார்.
தினை அளவேயாயினும் நல்ல செயல்களைச் செய்யாத வெட்கமில்லாத  மூடர்கள் இறந்தால் என்ன… இறக்காமல் இருந்தால் என்ன..?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக