வெள்ளி, 27 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :859


திருக்குறள் -சிறப்புரை :859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.---- ௮௫௯
ஒருவன் செல்வ வளம் பெறும்பொழுது எவரிடத்தும் மாறுபாடு கொள்ளான்; அவனோ கேட்டினை வரவழைத்துக் கொள்வதற்கு மாறுபாட்டினை மேற்கொள்வான்.
”அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ…” ---பழமொழி.
அடாது செய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும் அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ? விரும்ப மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக