செவ்வாய், 17 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :849


திருக்குறள் -சிறப்புரை :849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.--- ௮௪௯
புல்லறிவாளன், தன்னை எல்லாம் அறிந்தவனாகக் கருதிக் கொள்வதால் பிறர் அவனுக்கு அறிவுரை வழங்க  முனைந்தால் அவனால் பழிக்கப்படுவதோடு அறிவுரை வழங்கச் சென்றவர் ஒன்றும் அறியாதவனாகி நிற்பர்.  அறிவுரை ஏற்கும் அளவுக்கு அறிவற்றவன் தான் தன்னை உணர்ந்தவாறே எல்லாம் அறிந்தவனாகத் தன்னை மேலாக எண்ணிக் கொள்வான்.
”கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
 சொல் ஞானம் சோர விடல்.” ---நாலடியார்.
அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே. நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக