திங்கள், 16 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :848


திருக்குறள் -சிறப்புரை :848
ஏவவும் செய்கலான் தாந்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். ---- ௮௪௮
(அளவும் ஓர் நோய்)
சிற்றறிவு உடையான், அறிவுடையோர் சொல்லியபடி நடக்க மாட்டான்; தானே சிந்தித்து செயல்படவும் அறியான், அவன் உயிர் நீங்கும்வரை அவனுக்கு இஃது ஒரு நோயாகும்.
“அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.—நாலடியார்.
பொறாமை முதலிய கெட்ட குணங்கள் இல்லாத அறிவுடையோர் அறக்கருத்துகளை எடுத்துச் சொல்லும்போது  நற்குணம் இல்லா சிற்றறிவினர் செவி கொடுத்துக் கேட்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக