புதன், 11 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :844


திருக்குறள் -சிறப்புரை :844
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. --- ௮௪௪
புல்லறிவு எனப்படுவது யாதென்றால் “யாம்” அறிவிற்சிறந்தோம் என்று தம்மைத்தாமே போற்றி இறுமாப்புக்கொள்ளும் சிற்றறிவாம்.
“நில்லாத காட்சி நிறைஇல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.”-இனியவை நாற்பது.
தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக