புதன், 25 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :857


திருக்குறள் -சிறப்புரை :857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். ----- ௮௫௭
வெறுப்பு என்னும் தீமையோடு ஒன்றினார் துன்பத்தை உண்டாக்கும் அறிவினையுடையார்,அவர்,  இன்பம் தருகின்ற நன்னூல்கள் நல்கும் மெய்ப்பொருள்களை அறிய விரும்பார்.
“ நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
 கெடுங்காலம் இன்றிப் பரக்கும்…” –நாலடியார்.
நீண்ட காலம் கழிந்தாலும் மனிதத் தன்மையற்றவர்களின் சினம் அழியாது வளர்ந்து கொண்டே இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக