வியாழன், 26 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :858


திருக்குறள் -சிறப்புரை :858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.--- ௮௫௮
மனத்தில் எழும்  காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அதனை நீக்குதல் ஆக்கம்தரும், அப்படிச் செய்யாமல் அவ்வுணர்ச்சியை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவானாயின் அவன் தனக்குத் தானே  கேட்டினை ஊக்கப்படுத்திக் கொண்டவனாவான்.
“ தீதும் நன்றும் பிறர்தர வாரா
 நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.”—புறநானூறு.
நமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை ; துன்பம் நேர்தலும் அது தீர்தலும் கூட நம்மால் விளைவதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக