ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :847


திருக்குறள் -சிறப்புரை :847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.---- ௮௪௭
அரிய நூல்களின் நுண்பொருளைச் சான்றோர் உரைத்தும் அதன்வழி நடக்காது,  தன்மனம்போல் நடக்கும் அறிவற்றவன் தனக்குத் தானே தீராத தீங்கினைச் செய்து கொள்வான்.
“பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்
நன்று அறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால். ”---நாலடியார்.
நன்மை இன்னதென்று அறியாத மூடர்களுக்கு அறநெறிகளைப்பற்றி உரைப்பது, பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டியில் மாம்பழச்சாற்றை ஊற்றியது போலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக