வியாழன், 5 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :838


திருக்குறள் -சிறப்புரை :838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.--- ௮௩௮
பேதையானவன் தன் கையில் உடைமையாக ஒரு பெற்றுவிட்டால் பித்துப்பிடித்தவன் கள்ளையும் உண்டு மயங்கியதற்கு ஒப்பாவான்.
“ முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
  இந்திரனாக எண்ணிவிடும்.” –நாலடியார்.
முந்திரியின்  அளவுக்குமேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின் கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.( முந்திரி –  1/320 ; காணி- 1/80)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக