திங்கள், 30 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :862


திருக்குறள் -சிறப்புரை :862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. --- ௮௬௨
ஒருவன் தன்னைச்சார்ந்தாரிடத்தும் அன்பு இல்லாதவனாய் ; துன்பத்தில் துணையாகும் நல்ல துணை இல்லாதவனாய் ; தானும் வலிமையற்றவனாய் இருந்தால் அவனால் எப்படிப் பகைவரின் வலிமையை வெல்ல முடியும்..?
“இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை…” ---நாலடியார்.
ஒரு செயலைச் செய்ய இயலாது என்றாலும் மன வலிமையால் அச்செயலை வென்றெடுக்க முயல்வதே ஆண்மைக்கு அழகு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக