சனி, 7 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :840


திருக்குறள் -சிறப்புரை :840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். --- ௮௪0
(கழாஅக்கால் – கழுவப்படாத கால்)
சான்றோர் குழுமியிருக்கும் அவையுள் பேதை ஒருவன் புகுதல் காலினைக் கழுவாமல் தூய்மையான படுக்கை அறையுள் நுழைவதைப் போன்றதாம்.
“கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால் முரியும்..” –நான்மணிக்கடிகை.
கல்வியறிவு உடையோன் மனம் தளர்வானேல் எப்படியேனும் முயன்று உய்வான்; கல்வியறிவு இல்லாத பேதை தளர்வானேல் முயற்சியின்றிக் கெட்டு அழிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக